எந்தன் வழிகாட்டியாய்
எந்தன் வாழ்வை
வசந்தமாக்கிய வாசமாய்
வந்தவன் நீயே ...
உன் கை தட்டலில்
தவழ்ந்து வந்து
உன் கால் பிடித்து எழுந்து
உன் சுண்டு விரல் பிடித்து
நடை பழகிய
என் கால்களும்...
உன் வயிறு சிம்மாசனம் ஏறி
மார்பின் முடி பிடுங்கி
முகம் முதல் முழுவதும்
நக கீறல் இட்ட
என் கரங்களும்
தவறிய மொழிகள் எல்லாம்
தத்தை மொழி என்று
ரசித்திட்ட உன் அன்பால்
தலைகனம் பிடித்த
என் வார்த்தைகளும்
தந்தையே ...
உன்னையே உலகாய்
எண்ணிக்கொண்டு இருக்கின்றன ..
என் தலை வகிடு முதல்
தாழ் பணியும் குணம் வரை
உன்னை பார்த்து
என்னில் உருவாகியவை தான்...
உன் தோள் மீது
துள்ளி விளையாடிய
நினைவும் ...
கால் மீது
தொட்டில் ஆடிய
உறவும்
உனக்கு பதிலீடின்றி
பட்டினி கிடக்கின்றன ....
நீயே என் முழு உரு
நீதான் என் முதல் குரு ,...
உன் கோபங்களூடே
என்னை குணமுள்ளவனாக்கியது
உன் அன்பு ...
உன் அர்ச்சனை யை
என் அழகிய வாழ்வின்
ஆபர்ணமாய் சூடிக்கொண்டேன்
வேதனை கள் உன்னை
என்னில் இருந்து
வேறு படுத்திய போதும்
என்னை உலகத்தின் பார்வையில்
வேறு படுத்தியவன் நீ ....
தந்தையே
தவறும் காலங்கள்
என்னை தறுதலையாய்
செய்தாலும் ...
உன் தனையனாய்
உன் அன்பின் அணைப்போடு
தவறாமல் இருப்பேன் ...