டாக்டர் . அப்துல்கலாம் இரங்கற்பா
அக்னிச் சிறகுகள் தந்த அருமை தலைவா ....
கனவு காணச் சொன்ன கருணை தலைவா...
மண்ணகம் இருந்த உன்னை
விண்ணகம் அழைத்து ச் சென்ற
வீரன் தான் மரணமோ ?
விண்ணகம் அழைத்து ச் சென்ற
வீரன் தான் மரணமோ ?
கவலையோடு எமை விட்டு - ஏவு
கணையாகப் பறந்தீரே....
கணையாகப் பறந்தீரே....
நீர் நிரம்பிய கண்கள் தோன்றுது
திரும்பிய பக்கமெல்லாம் ..
"நீர் " இறந்திட்ட சோகத்தில் ....
திரும்பிய பக்கமெல்லாம் ..
"நீர் " இறந்திட்ட சோகத்தில் ....
பிரிந்தீரே எமை விட்டு
வருந்துகிறோம் கண்ணீர் விட்டு ....
வருந்துகிறோம் கண்ணீர் விட்டு ....
பல பிறப்பு பிறந்தாலும்
பாரதத்தில் தான் பிறக்க
வரம் வேண்டி வணங்குகிறோம்....
பாரதத்தில் தான் பிறக்க
வரம் வேண்டி வணங்குகிறோம்....