ஜூலை 18 2013 அன்று வாலி இறந்த போது முகநூலில் நான் பதிவு செய்த
இரங்கற்பா
வயது முதிர்ந்த
வாலிபம் ஒன்று
வானில் இன்று....
கவிய நாயகனே
காவியமாய் நீ இன்று ....
மரணம் உன்னை தீண்டியதால்..
கவிதை உலகுக்கு எதிரி இன்று...
கவிதை கூட கலங்கியது ...
கவிதை கடலாம் உன் பிரிவால்...
தமிழ் எழுத்து தயங்கியது..
நீ இல்லா கவியாய் மாற ...
புன்னகை கூட
அழும் விந்தை
உன் மரணம் காட்டியது ....
பூக்கள் கூட
தன் நிறத்தை
கருப்பாய் இன்று மாற்றியது...
எமன் உன்
கவி கேட்க
எம்மிடம் இருந்து
உன்னை பிரித்தான் ....
வாலி பமாய் கவி வடித்தாய் ..
வாழ்க்கை எல்லாம் இடம் பிடித்தாய் ...
எமை வாட்டிடவோ
இன்று பிரிந்தாய் ....
இதயம் ஒன்று
இல்லாத உடல் போல்....
நீ இல்லா
தமிழ்(நாடு ) இன்று
வேல் பாய்ந்த புண் போலே
புலம்பும் நிலை
என் சொல்ல ........
உன் தமிழ் இன்றி தவிக்கும் ..
இரங்கற்பா
வயது முதிர்ந்த
வாலிபம் ஒன்று
வானில் இன்று....
கவிய நாயகனே
காவியமாய் நீ இன்று ....
மரணம் உன்னை தீண்டியதால்..
கவிதை உலகுக்கு எதிரி இன்று...
கவிதை கூட கலங்கியது ...
கவிதை கடலாம் உன் பிரிவால்...
தமிழ் எழுத்து தயங்கியது..
நீ இல்லா கவியாய் மாற ...
புன்னகை கூட
அழும் விந்தை
உன் மரணம் காட்டியது ....
பூக்கள் கூட
தன் நிறத்தை
கருப்பாய் இன்று மாற்றியது...
எமன் உன்
கவி கேட்க
எம்மிடம் இருந்து
உன்னை பிரித்தான் ....
வாலி பமாய் கவி வடித்தாய் ..
வாழ்க்கை எல்லாம் இடம் பிடித்தாய் ...
எமை வாட்டிடவோ
இன்று பிரிந்தாய் ....
இதயம் ஒன்று
இல்லாத உடல் போல்....
நீ இல்லா
தமிழ்(நாடு ) இன்று
வேல் பாய்ந்த புண் போலே
புலம்பும் நிலை
என் சொல்ல ........
உன் தமிழ் இன்றி தவிக்கும் ..