Saturday 31 January 2015

புன்னகை ......

வெற்றி பெற்றோர்கள் 
படைக்கும் உடனடி 
கவிதை ....
புன்னகை ......

கண்ணீருக்கு கவலை இல்லை ...............

மாசு நிறைந்த இம்
மானுட தேசத்தில்
கலங்கிய கண்களுக்கும் 
களங்கமில்லா மனங்களுக்கும் தான் கவலை ......

உடைந்த பல இதயங்கள்
எழுதிய இரங்கற்பாக்கள் ....
கண்ணீர் துளிகளின்
கடைசி சங்கமத்தில்
பல நூறு பார்கடல்கள் ......
அங்கே ....
நூறு பரந்தாமன்கள்....
பள்ளி கொண்ட படி ....
விண்ணை முட்டும் அளவு
வேதனைகள்....
ஒரு பரந்தாமன் கூட
விஸ்வரூபம் எடுத்து
வேதனையை விரட்ட வில்லை ....
கண்கள் அளக்கும்
அனைத்தும் இதயத்தை
காய படுத்தினால்
கடல் அளவு
கண்ணீர் என்பது
நம் கற்பனையில்
கொஞ்சம் தான் ......
பசி , பிணி யால் வரும்
உயிர்வதைக்கும்
கண்ணீரின் அளவு ....
உறவுகளால் வரும்
உள் காயத்தால் வரும்
கண்ணீரில் பலமடங்கு குறைவு ....
வேதனை களை சுமந்தும்
இறுகிய இதயதில்
இருந்து உருகியும்
சதை களை வருடிய படி
சல்லாப உல்லாசமாய்...
ஓடி விளையாடும்
கண்ணீருக்கு என்ன கவலை .....
காயப்பட்டு ....
கனத்து போய்
கவலை கொள்ளும் ...
மனதிற்கு மட்டும் தான் கவலை ..........

இது தான் உண்மை காதலோ ....?

நதிக்கரை மணலில்
நீயும் நானும் .....
நீ...
கரை மணலை ஏடாக்கி 
காலால் கவிதை வரைந்து கொண்டிருக்கிறாய் .....
நான்....
கவிதையை கண்முன்னே
கண்டு கொண்டு
கற்பனையில் கம்பனாகிறேன் .....
நம் இருவர்
உள்ளத்து உள்ளுவதும்
காவியம் பல கண்டு ..
கவி பல வென்று ...
ஆதாம் தொடங்கி
அழியாமல் நிற்கும் ..
காதல் தான்.....
உன் தாய் தந்த
நாணத்தால் தயங்கும்
உன் உதடுகளுக்கு .....
உதவிட மறுக்கும்
உன் முகத்தை
பார்த்த
தரை மணல் ...
தவழ்ந்து வரும்
தத்தை யாம்
தண்ணிய நீரில்
தானாக கரைந்தது .....
என் மூச்சில் வரும்
காற்று கூட
உன் முகத்தை
பார்க்கும் ஆவலில்
உன் முன்னே நிற்கிறது ....
மௌனங்கள் மட்டும்
மௌனமாய் பெசிக்கொண்டிருகிறது .....
நொடிகள் நிமிடமாகி
நிமிடம் மணியாகி
நிசப்தம் மட்டும் நிஜமாகிறது .....
நிற்பது இருவரும்
நம் மனம்
நதி தாண்டி
வனம் தாண்டி
கடலை கடந்து
காதல் சொல்கிறது .....
உதடு உணர்த்தாத
நம் உன்னத காதலை ....
உம் ....
என்ற உச்சரிப்போடு
திரும்பி செல்லும் போது..
நம் உள்ளம் உணர்த்துகிறது ........
நம் கால்கள்
கடந்து செல்லும் போது ..
கண்ணீர் வழியே
நம் காதல்
நம்மோடு ஒட்டிகொண்டது ....
ஓ....
இது தான் உண்மை காதலோ ....?

மழை.....

மேகத்தோடு மெலிய
காதல் கொண்ட
கடல் நீரில் 
காரெனும் கருவாகி ....
வளர் மலை முட்டி
குளிர் வளி தீண்டி ...
கோடை விலக்க..
குவலயத்தில் குதித்தாய்
வாடை
கொஞ்சும் மழையாக.....

நீயே ....

கதிரவன் ஒளியும் நீயே ...
கார்முகில் மழையும் நீயே ...
பொன்வண்ண நிலவும் நீயே ..
பொங்கிடும் நதியும் நீயே ...

வண்ணத்தின் அழகும் நீயே
வானத்தின் வனப்பும் நீயே ...
தழுவிடும் தென்றல் நீயே ..
தணித்திடும் குளிரும் நீயே ...
சோலையின் செழுமை நீயே ..
காலையின் இனிமை நீயே ..
தருவின் நிழலும் நீயே...
தங்கத்தின் ஜொலிப்பும் நீயே ....
காதலின் தவிப்பும் நீயே ..
கருணையின் உருவும் நீயே ..
இதயத்தில் துடிப்பும் நீயே ..
உதிரத்தின் ஓட்டம் நீயே ..
காதலாய் கலந்தாய் நீயே
ஆதலால் என் மொத்தம் நினதே .......

பசலை நோய் ....

மை பூச விழி ரெண்டும்
மறுத்து நிற்குது ..
நடனமாடும் நற் கூந்தல்
நாட்டம் மறுக்குது ....
கண் துஞ்ச மறுக்குது -இரு
கால் நடக்க மறக்குது ....
மலர் மணம் வெறுக்குது ..
மனம் தினம் தினம் நோகுது ...
பசி யது விலகுது -நல்ல
ருசியது மறக்குது
இடை வருடும் மேகலை -தன்
இடம் விட்டு நகருது ....
மது ஊறும் இதழ் அமுதம்
கொடும் நஞ்சாய் மாறி போனது...
பசலை யாம்
நோய் என்னை....
பாடாய் யன்றோ படுத்துது .....

மரித்துப்போன மனிதநேயம் ...

கொட்டும் மழையில்
குடை பிடித்தபடி நான் நடக்க ....
குளிரில் நடுங்கியபடி
குத்து செடியோரம்
குத்தவைத்து இருக்கும் 
கூன் விழுந்த மூதாட்டியை பார்த்து ..
"பாவம்" என்று
பாசாங்கு வார்த்தை
பகன்று விட்டு ....
பத்து நொடிகள்
பாசப்பார்வை பார்த்துவிட்டு ....
பணிச்சுமை என்று
பரிதாபம் மட்டும் காட்டும்....
என்னிடமும் ....
மனித நேயம் மரித்து தான் போய்விட்டது .......

Friday 30 January 2015

நிலவே ....

விண் மீனுக்கு அரசியாய்
வீற்று நீ இருந்தால்
மண்ணில் உள்ள
மாற்றத்தை உன்
மனம் தான் உணருமோ ?

அங்கிருந்து பார்த்திட்டால்
வளம் கொஞ்சும் வண்ண காடும்
வழிந்தோடும் நதி நீரும்
பரந்திருக்கும் பார் நிலமும்
திரை கொண்ட கடல் எழிலும்
திகட்டாமல் ரசிக்க தோன்றும் ...

வானகத்தில் வசந்தமாய்
வசித்தது போதும் ..
வையகம் ஒரு நாள் ..
வந்து தான் பாரேன் ......

கூறு பட்ட நிலத்தின்
மாறு பட்ட நிலைமையின்
வேறு பாட்டை உணர்ந்திடுவாய் ...

தண்ணீருக்கு அங்கங்கே
தடை உண்டு அறிந்திடுவாய் ...

திரை கடல் சென்றோரில் ..
திரும்பிடார் எண்ணிக்கை
தினம் தினம் அறிந்திடுவாய் ....

பால் முதல் பலவற்றில்
படர்ந்திட்ட கலப்படத்தின்
பயன் கூட தெரிந்திடுவாய் ...

காற்றின் மாசு -வாழும்
காலத்தை குறைக்கும்
கஷ்டத்தை நீ உணர்வாய் ....

மொழியோடு நிறமும்
இறையோடு இனமும்
வேறுபட்ட பூமியின் ..
வேஷம் அதை அறிவாய் ...

அன்பும் அகிம்சையும் -இங்கே
விலை பேசி விற்கப்படும்
நிலை கண்டு தவிப்பாய் ....

அநியாயம் இப் புவியில்
நியாயமாய் போனதை கண்டு
நீயும் வியப்பாய்....

வான் நிலவே ...
வா நிலவே ...
வையகம் வாழ்
நிலையை பார் நிலவே ....

தேய்ந்த பின்னும்
வளர்வாய் நீ ....

தேய்வதே வளர்ச்சி- எனும்
எங்கள் நிலை
என்ன சொல்ல ....?